Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனி நாடாக அங்கீகாரம் பெரும் பாலஸ்தீனம்!

தனி நாடாக அங்கீகாரம் பெரும் பாலஸ்தீனம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதனை அயர்லாந்தின் பிரதமர் சைமன் ஹாரிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மிச்செல் மார்ட்டின் ஆகியோர் இன்று( 23 ) அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது.

ஹமாஸின் முக்கிய மையமான காசா மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

நெதன்யாகுவின் படைகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரு நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதே தீர்வு என ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேனியா, மால்டா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு மே 21 அன்று வெளியிடப்படும் என்று கூறினார்.

அதேபோல், இம்மாத இறுதிக்குள் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவது உறுதி என அயர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மிச்செல் மார்ட்டின் கடந்த 17-ம் திகதி தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாகவே, இன்று அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 137 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன

பாலஸ்தீனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் ஆதரவு கிடைக்கவில்லை.

தொடர்புடையசெய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
Next Post
நாட்டில் கடனால் அவதியுறும் மக்களுக்கு அறிவை வளர்க்க நடவடிக்கை!

நாட்டில் கடனால் அவதியுறும் மக்களுக்கு அறிவை வளர்க்க நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.