Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு நடைமுறைக்கு வரும் புதிய வரி!

வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு நடைமுறைக்கு வரும் புதிய வரி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்போரிடமிருந்து வீட்டின் உரிமையாளர் பெற்றுக்கொள்ளும் வருமானத்தை மதிப்பிட்டு, அதற்கு வரி அறவிடுவதற்கும், வசிக்கும் மற்றும் வசிக்காத குடியிருப்புக்களுக்கு வரி அறவிடுவதற்கும் சர்வதேச நாணய நிதியம் கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த யோசனை முன்வைத்துள்ளது. அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டுமாயின், இந்த வரி முறைமை முழுமையாக செயற்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சொத்து உரிமையாளர்களிடம் உள்ள சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் குறித்து நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மதிப்பீடுகள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த தரவு கோப்பிடல் அல்லது களஞ்சியப்படுத்தல் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் செயற்றிட்டத்தின் இரண்டாவது மீளாய்வினை தொடர்ந்து ‘ஐ.எம்.எப் கன்ட்றி ரிபோட் 24.161’ அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறையாக 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் வசிக்கும் மற்றும் வசிக்காத குடியிருப்புக்களின் சொத்துகளுக்காக கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி முறைமையை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதாயின் இவ்வாறான வரிகளை அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இந்த வரி இலக்கை 2026ஆம் ஆண்டுக்குள் பூரணப்படுத்த இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி என்பது வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை வாடகை அடிப்படையில் வழங்குதாயின் அவருக்கு அதனூடாக கிடைக்கப்பெறும் வருமானத்தை மதிப்பிட்டு அதற்கான வரியை அறவிட வேண்டும். இந்த வரி வீட்டின் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படமாட்டாது. கிடைக்கப் பெறும் வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

இந்த வரி முறைமையை அமுல்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் தரவு கோப்பிடல் என்ற புதிய முறைமையை இலங்கை உருவாக்க வேண்டும். இந்த தரவு களஞ்சியப்படுத்தலில் சொத்து உரிமையாளர்களிடம் உள்ள சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் குறித்து நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மதிப்பீடுகள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த தரவு கோப்பிடல் அல்லது களஞ்சியப்படுத்தல் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் அறிமுகப்படுத்த எதிர்பார்த்த ஆதன வரி மற்றும் சொத்து வரி முறைமையை நடைமுறைப்படுத்த பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதும் அதற்கு பல தடைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
Next Post
கையடக்கத் தொலைபேசிகளை அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்குமாறு கோரிக்கை!

கையடக்கத் தொலைபேசிகளை அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்குமாறு கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.