உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அதற்கு ரஷ்யா செவி சாய்ப்பதில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகாலப் போரில் ரஷிய வீரர்கள் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களில் 2.5 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.