Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“போதையற்ற எதிர்காலம்” என்ற தொணிப்பொருளில் வாழைச்சேனையில் சிறுவர் விளையாட்டு விழா!

“போதையற்ற எதிர்காலம்” என்ற தொணிப்பொருளில் வாழைச்சேனையில் சிறுவர் விளையாட்டு விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

போதையற்ற எதிர்காலம்’ என்ற தொணிப் பொருளிலான சிறுவர் விளையாட்டு விழா வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வாழைச்சேனை ஏ.ஓ.ஜி தேவ சபை வாழைச்சேனை வணக்கத்திற்குரிய போதகர் குலத்துங்க லக்ஷ்மணகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிதிகளாக தேவ சபையின் கிழக்கு பிராந்திய தலைவர் வணக்கத்திற்குரிய போதகர் எஸ்.பாஸ்கரன், கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகங்களின் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்த்தர்களான அ.அழகுராஜ்,.எம்.காசீம் ஆகியோர்களுடன் கிராமசேவகர் எஸ்.வரதராஜன் மற்றும் ஓய்வு பெற்ற கோட்டைக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சின்னத்தம்பி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது சிறுவர் இல்லங்கள் அமைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

அன்பின் இல்லம்-சந்தோசத்தின் இல்லம், சமாதானத்தின் இல்லம்.பொறுமையின் இல்லம் என நான்கு வகையான இல்லங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கிடையே பல்வேறு வகையான கிராமிய, கலாச்சார ரீதியிலான விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளின் அடிப்படையில் பொறுமை இல்லம் முதலாம் இடத்தினையும், அன்பு இல்லம் இரண்டாம் இடத்தினையும், சமாதானம் இல்லம் மூன்றாம் இடத்தினையும் சந்தோசம் இல்லம் நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.

இந்தநிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் நிகழ்வின் ஆரம்பத்தில் தேவ சபைகளினால் தேசிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை தேவ சபை அணி முதலாம் இடத்தினை பெற்றுகொண்டது.15 பிராந்தியங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்குபற்றியிருந்தன.அன்றைய தினம் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

August 18, 2026
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலக செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

August 18, 2026
வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
செய்திகள்

வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

August 18, 2026
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!
செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!

August 18, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

August 18, 2026
கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!
செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

August 18, 2026
Next Post
அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோட்டம்!

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.