Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிரான் அலஸின் உத்தரவில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரகுமார் எம்.பி? ; சபையில் சுமந்திரன் முன்வைத்த இரண்டு கேள்விகள்!

டிரான் அலஸின் உத்தரவில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரகுமார் எம்.பி? ; சபையில் சுமந்திரன் முன்வைத்த இரண்டு கேள்விகள்!

3 years ago
in முக்கிய செய்திகள்

கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்று (07) காலை கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மாலை பிணையில் விடுவித்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான காணொளிகளை பார்த்தேன். அதில் காவல்துறையினர் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர்.

ஆனால் கஜேந்திரகுமார் குறித்த காவல்துறையினரை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியும் உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது கஜேந்திரகுமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நடந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது” எனக் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட கஜேந்திரகுமார் அவர்கள், “அந்த சந்தர்பத்தில் குறித்த இடத்திற்கு சிவில் உடையில் வந்த இருவர் தம்மை காவல்துறையினர் என கூறினர். அவர்களிடம் நான் அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கும்படிக் கேட்ட பொமுது அதற்கு மறுப்பு தெரித்து என்னை தாக்கினர்” என குறிப்பிட்டார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இரண்டு கேள்விகளை முன்வைத்தார் .

01.சிவில் உடையில் வந்து தம்மை காவல்துறையினர் என கூறிய இருவரும் ஏன் தமது அடையாள அட்டைகளை காண்பிக்க மறுத்தனர் ?

02.கஜேந்திரகுமார் தான் இன்று நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என கூறிய போது அவ்வளவு அவசரமாக அவரை கைது செய்வதற்கு காரணம் என்ன ?

என அமைச்சர் டிரான் அலசிடம் கேட்டார்.
இதற்கு காவல்துறையினர் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர். காவல்துறையினர் மீது எந்த தவறும் இல்லை என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

இதன்போது கஜேந்திரகுமார் அவர்கள், “அப்போது பாதுகாப்பு அமைச்சரான ( டிரான் அலஸ்) உங்களின் உத்தரவின் பேரிலா என்னை கைது செய்தனர் என கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட சாபாநாயகர் இந்த சம்பவம் குறித்த காவல்துறை விசாரணைகள் இடம்பெற்று வருவதால் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
Next Post
பதவியை இராஜினாமா செய்தார் சுதத் சந்திரசேகர!

பதவியை இராஜினாமா செய்தார் சுதத் சந்திரசேகர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.