Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழகத்தில் அமுலுக்கு வந்த மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பான தண்டனைகளும்- விளக்கங்களும்!

தமிழகத்தில் அமுலுக்கு வந்த மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பான தண்டனைகளும்- விளக்கங்களும்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தில் “மதுவிலக்கு திருத்த சட்டம் 2024” என்னும் சட்டம் நேற்று (13) முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன்,இது தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தான் இந்த மதுவிலக்கு திருத்த சட்டம் 2004ன் படி எந்தெந்த குற்றங்களுக்கு எவ்வளவு ஆண்டு சிறை தண்டனை என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் இறந்தனர்.

இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 29 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு நேற்று முன்தினம் (12) ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து நேற்று முதல் தமிழகத்தில் மதுவிலக்கு சட்ட திருத்தம் 2024 என்பது அமலுக்கு வந்துள்ளது.

இந்த மதுவிலக்கு சட்ட திருத்தம் 2024ன் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

*100 லிட்டருக்கு மேல் சட்ட விரோதமாக மதுபானம் ஏற்றுமதி, இறக்குமதி செய்தல் அல்லது வைத்திருத்தல், சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்தல், சட்ட விரோதமாக மதுபான ஆலை கட்டுவது, விற்பனைக்காக சட்ட விரோதமாக மதுபானங்களை பாட்டில்களை அடைத்தல் போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 2- 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

*50 லிட்டருக்கு மேல் நூறு லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி அல்லது வைத்திருத்தல் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

*ஐம்பது லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, அல்லது வைத்திருத்தல், சட்ட விரோதமான மது அருந்துதல் மற்றும் வாங்குதல், உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்குஓராண்டுக்கு குறையாத 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 50,000/- ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

*மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு இனி ஆயுட்காலத்திற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்து இலட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.

*மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இனி 5 -10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 5 – 10 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் என விதிக்கப்படும்.

*மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்திற்குப் புதிய பிரிவாக, அந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும்.

*மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்திற்கு, 2- 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 – 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

*மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்பட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளும் போராட்டம் செய்யப்போவதாக அறிவிப்பு!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளும் போராட்டம் செய்யப்போவதாக அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.