Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

2 hours ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற எவருமே தங்கத் தாம்பாளத் தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைத் தரமாட்டார்கள் என்றும், எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சூழலை நாமே உருவாக்க வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈ.பி.டி.பி. முன்வைத்த மாற்று அரசியல் கொள்கைகளே நடைமுறைச் சாத்தியமானது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுப்படுத்தி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு மட்டுமே இந்திய அரசாங்கத்தின் அனுசரணையும் இருக்கும்.

ஆனால் தற்போது, சிலர் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து சர்வதேச விசாரணை, சமஷ்டி என்று கூறி சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான வெற்று முழக்கங்கள் எமது மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது. மாகாண சபை முறையில் இருந்து ஆரம்பித்து, ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற இலக்கினை நோக்கிப் பயணிப்பதே எமது இறுதி நோக்கம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இதனைப் பல ஏமாற்றங்களுக்குப் பிறகு தற்போது அனைத்துத் தமிழ்த் தரப்பினரும் உணர்ந்து வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறான உண்மைகளும், எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத்திட்டங்களும் சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படாததே எமது அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

எனவே, எமது அரசியல் கொள்கைகளைச் சாத்தியமான அனைத்து வழிமுறைகள் ஊடாகவும் மக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வர கதவு திறக்கப்பட்டுள்ளது; விமல் வீரவன்ச
செய்திகள்

புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வர கதவு திறக்கப்பட்டுள்ளது; விமல் வீரவன்ச

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்

July 5, 2026
Next Post
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.