Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்காக மேம்பாலம்; உள்ளக வீதி திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உறுதி!

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்காக மேம்பாலம்; உள்ளக வீதி திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உறுதி!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்து ரீதியான பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக பெருந்தெருக்கள் அமைச்சு சுமார் 30 கோடி ரூபா நிதியில் காபட் இடப் பட்ட உள்ளக வீதி ஒன்றை நிர்மாணித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் எதிர்நோக்கி வந்த இந்த நீண்ட கால பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் புதிய காபற்று வீதி தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய காபட் வீதியை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த் தன கடந்த 13 ஆம் திகதி மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாக இருந்தனர்.

இதன்போது பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் புகையிரத போக்குவரத்தில் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் பற்றி எடுத்துக் கூறியதுடன், அப்பிரதேசத்தில் புகையிரத உப நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதேசமயம் பல்கலைக்கழகம் முன்பாக வீதிகளை கடக்கும் போது பல்வேறு அனர்த்தங்களையும், வீதி விபத்துகளையும் சந்திக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் வசதி கருதி பல்கலைக்கழகத்தின் முன்பாக மேம்பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறும் இங்கு அமைச்சர் பந்துல குணரத்னவிடம் உபவேந்தர் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கையினை கவனத்தில் கொண்ட அமைச்சர் பந்துல குணரத்ன புகையிரத உபநிலைய ம் ஒரு மாதத்தில் உருவாக்குவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும், மேம் பாலம் அமைக்கும் பிரச்சினையை அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கக்கூடியவாறு தாம் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
அடம்படிவெட்டுவான் பிரதேசத்தில் சிறு போக அறுவடை விழா!

அடம்படிவெட்டுவான் பிரதேசத்தில் சிறு போக அறுவடை விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.