Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மில்கோ பால் சேகரிப்பு நிலையம் இந்திய கம்பனிக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம்!

மில்கோ பால் சேகரிப்பு நிலையம் இந்திய கம்பனிக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மில்கோ பால் சேகரிப்பு நிலையத்தை இந்திய கம்பனி ஒன்றிற்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்து பால் பண்ணையாளர்கள் நேற்றைய தினம் (16) அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலைய பால் பண்ணையாளர்கள் தமது சேகரிப்பு நிலையத்தில் நின்று , பால் கலண்களுடன் , அருகில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடி கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு பாலை வழங்கி கொண்டு வருகிறோம் அதில் எமக்கு இடர்பாடுகளும் இல்லை.

எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய கொடுப்பனவு முறைகளை வழங்குகிறது.மேலும் எமக்கு பிள்ளைகளின் கற்றல் , மரணச் செலவு , திருமணச்செலவு , உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை நல்கி வருகின்றனர்.

எனவே இவ்வாறான நிறுவனத்தை இந்திய கம்பனிக்கு விற்பனை செய்வதை நாம் முற்றாக எதிர்கிறோம். இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்தா விட்டால் எமது போராட்டம் மேலும் தொடரும் என பால் பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதே போன்று மற்றுமொரு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மண்டூர் கணேசபுர பால் சேகரிப்பு நிலையத்தில் ,பால் வழங்கி கொண்டு இருக்கும் பால் பண்ணையாளர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!
செய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

July 7, 2026
பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!
செய்திகள்

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

July 7, 2026
வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!
செய்திகள்

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

July 7, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு

July 7, 2026
கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

July 7, 2026
Next Post
“பெண்களை மூன்று நாள் எங்களுடன் வைத்திருந்து விட்டுதான் நீதிமன்றில் ஒப்படைப்போம்”; மூதூரில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

"பெண்களை மூன்று நாள் எங்களுடன் வைத்திருந்து விட்டுதான் நீதிமன்றில் ஒப்படைப்போம்"; மூதூரில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.