OYO நிறுவனத்திற்கு புதிய பெயர் பரிந்துரை செய்பவருக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என அதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில் ரித்தேஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்ட OYO நிறுவனம், இந்தியாவின் ஹோட்டல் முன்பதிவு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மேலும் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
OYO விற்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, 2020 ஆம் ஆண்டில், 27 வயதிலேயே, Hurun Rich List ஆல் உலகின் இளைய பில்லியனராக அங்கீகரிக்கப்பட்டார் ரித்தேஷ்.
தற்போது OYO நிறுவனம் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வரும் நிலையில், அதன் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸுக்கு(Oravel Stays) புதிய பெயரைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளார் ரித்தேஷ்.
புதிய பெயரை பரிந்துரை செய்வதற்கான போட்டியை அறிவித்துள்ள ரித்தேஷ் அகர்வால், அதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த பெயருக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இந்த பெயரானது நிறுவனத்தை குறிக்கும் வகையில் ஒரு வார்த்தையில் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தில் முன்னேறிய, கூர்மையான, நினைவில் வைத்திருக்கும் வகையில் இருக்க வேண்டும்.
விருந்தோம்பலுக்கு அப்பால் வளர பரந்த பெயராக இருக்க வேண்டும்.
.com டொமைன் கிடைப்பதாக இருக்க வேண்டும்.
ஒரு உண்மையான வார்த்தையாகவோ அல்லது முற்றிலும் புதியதாகவோ இருக்கலாம்.
பெயரை பரிந்துரைப்பதற்கான லிங்கை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் வழங்கியுள்ளார்.
இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படுவதோடு, ரித்தேஷ் அகர்வாலை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

https://www.instagram.com/reel/DKOlD3hz8ft/?utm_source=ig_web_copy_link