Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் ஆலய நகையை திருடிய குற்றச்சாட்டில் குருக்கள் கைது!

யாழில் ஆலய நகையை திருடிய குற்றச்சாட்டில் குருக்கள் கைது!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் ஆலய நகையை திருடிய குற்றச்சாட்டில் குருக்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அப்பகுதி மக்கள் வெடி வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன. இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில், போலிச் சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்தநிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

புளியங்கூடல் சந்தியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற மக்கள், முத்துவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்து கவனவீர்ப்பில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வேண்டி சிதறு தேங்காயும் அடித்திருந்தனர்.

இந்த விசாரணை இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது என்ற மக்களின் குற்றச்சாட்டு, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரான காளிங்க ஜெயசிங்கவின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவர், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவுக்கு மாற்றினார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலக வழிகாட்டலில் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழு இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் 28 வயதுடைய குருக்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆலயத் திருவிழாவின்போது உதவிக் குருக்களாகச் செயற்பட்டிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!
செய்திகள்

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

August 22, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

August 22, 2026
கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
செய்திகள்

கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

August 22, 2026
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்!
செய்திகள்

யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்!

August 22, 2026
சமிட்புர சதுவின் தகவலுக்கு அமைய மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!
செய்திகள்

சமிட்புர சதுவின் தகவலுக்கு அமைய மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!

August 22, 2026
உழவியந்திர சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!
செய்திகள்

உழவியந்திர சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!

August 22, 2026
Next Post
கொழும்பு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ பரவல்!

கொழும்பு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ பரவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.