Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு இணக்கத் தீர்வு வழங்கிய உயர்நீதிமன்றம்!

வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு இணக்கத் தீர்வு வழங்கிய உயர்நீதிமன்றம்!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பிரதேசம் தொடர்பான சர்ச்சைக்கு இன்று (09) உயர்நீதிமன்றத்தில் இணக்கமான தீர்வு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயம் காணப்படும் பிரதேசத்தில் தொன்மையான மரபுரிமை சின்னங்கள் இருக்கின்றன என்று தெரிவித்து, அவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டு, மூன்று பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரட்ண, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயப் பூசகர் மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

தொன்மையான மரபுரிமை இடங்கள், நிலையங்கள், சின்னங்கள் அங்கிருந்தாலும் வரலாற்றுக் காலத்தில் இருந்து அங்கு மேற்படி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடு நடைபெற்று வருவதால் அதைக் தடுக்க முடியாது, தடுக்கக் கூடாது என்று இருவரும் வாதிட்டனர்.

மேற்படி தொன்மையான மரபுரிமை மையங்களுக்கு பாதிப்போ, சேதமோ ஏற்படுத்தாமல் இரண்டு தரப்பினரும் தங்கள் வழிபாடுகளை தடையின்றி முழு அளவில் ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இணக்க ஏற்பாட்டை நீதிமன்றம் வழங்கியது.

இவ்விடயத்தை ஒட்டி வவுனியா நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கும், இன்று உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த இணக்க ஏற்பாட்டை தெரிவித்து, அதன் அடிப்படையில் தீர்வு காண்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை
செய்திகள்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை

May 15, 2025
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை
செய்திகள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை

May 15, 2025
Next Post
மட்டு பகுதியில் ஜீப் வாகனம் விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு பகுதியில் ஜீப் வாகனம் விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.