Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் ; சோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநர் பணிப்புரை!

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் ; சோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநர் பணிப்புரை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்றது.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

குடிநீர் பிரச்சினை, வீதி சீரின்மை, காணி பிணக்குகள், போக்குவரத்து சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான் முறைப்பாடுகள் தொடர்பில் வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

யாழ் மத்திய பேருந்து நிலையத்திலும், முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளிலும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் பேருந்து நிலையத்தில் 24 மணிநேரமும் காவல்துறை காவலரண் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.

மேலும் முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க, சிறந்த பொறிமுறை ஒன்றை திட்டமிட்டு துரித நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 826 திட்டங்களை செயற்படுத்த இந்த வருடம் 322 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 734 திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டுள்ளன. மிக நீண்ட காலத்தின் பின்னர் திறைசேரியிடமிருந்து கிடைத்த நிதியை உரியவாறு பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
இரகசியமாக இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

இரகசியமாக இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.