Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கில் மௌனயுத்தம்; கோ.கருணாகரன் எம்.பி தெரிவிப்பு!

வடகிழக்கில் மௌனயுத்தம்; கோ.கருணாகரன் எம்.பி தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்க வேண்டும் என்று திட்ட மிட்டு 1949ஆம் ஆண்டு
முதல் பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா கிழக்கில் கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து
வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு – கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌனயுத்தம். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் .மேலும்தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தமிழினம் இரண்டாம் தரபிரஜைகளாகவே இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம் .

2009 மே 18 உடன் ஆயுதப் போராட்டம் முற்றுமுழுதாக மௌனிக்கப்பட்டது. இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம். அதில் போராட்ட தலைவர்கள் மாத்திரமல்லர் மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசு கட்சியின் தலைவர்கள்
அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன சமாதான பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கினார். 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வட-கிழக்கில் வித்தியசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது.

அது தான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்கவேண்டும் தமிழரின் குடிபரம்பலை மாற்றி அமைக்க வேண்டும் வெலிஓயா குடியேற்றம் மூலம் இணைந்திருந்த வடக்கு கிழக்கை நிலத் தொடர்பற்ற மாகாணங்களாக பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டு செய்துவருகின்றது – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனான்; ஸ்டாலினுக்கு குத்தல் பேச்சு!

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனான்; ஸ்டாலினுக்கு குத்தல் பேச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.