Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தாண்டி பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு!

சித்தாண்டி பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியானது வருடாந்தம் இயற்கையின் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுவருகிற நிலையில் சட்டவிரோதமாக அகழப்படும் மண்வளத்தையும், இயற்கை அழிவையும் தடுக்கும் முகமாக ‘பனை நடுவோம் பயன்பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இன்றைய தினம் (12) 15000 பனைவிதை நடும் நிகழ்வை சித்தாண்டி சிகன்டி அறக்கட்டளை மற்றும் சித்தாண்டி பகுதிகளிலுள்ள ஆலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்களின் பங்களிப்புடன்
சித்தாண்டி சந்தனமடு ஆற்றங்கரை பகுதிகளில் பனைவிதைகள் நடுபணிகள் இடம்பெற்றது.

இன்றைய பனைவிதை நடும் நிகழ்வுக்கு சித்தாண்டி பகுதிகளிலுள்ள பல ஆலயங்களின் அறங்காவல் தலைவர்கள், விளையாட்டுக்கழகத்தின் தலைவர்கள், மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளையின் தலைவர் மு.முரளிதன் கருத்து தெரிவிக்கையில்,

ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அகழப்படும் மணல் அகழ்வினால் சித்தாண்டியில் வருடா வருடம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. அத்துடன் மண்ணரிப்பு உள்ளிட்ட பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. இவற்றைத்தடுக்கும் முகமாக பலவருட காலமாக 10 லட்சத்துக்கு மேல் பனை விதைகளை நட்டுள்ளோம்.

அத்துடன் அப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக பனைவிதைகளை நட்டு வளர்க்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளதுடன் அவ்வாறான செயற்பாடுகளும் நடைபெறுகின்றது.

தற்போது சட்ட விரோத மணல் அகழ்வு நடைபெறுகின்றது என்றார்.

இன்றைய தினம் 15000 பனை விதைகள் நடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்
காணொளிகள்

மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

May 18, 2025
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
செய்திகள்

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு

May 18, 2025
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
Next Post
அனுராதபுர மாவட்டத்தில் 491 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

அனுராதபுர மாவட்டத்தில் 491 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.