Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வியாழேந்திரனின் அமைதிக்கு பின்னால் இருப்பது என்ன?

வியாழேந்திரனின் அமைதிக்கு பின்னால் இருப்பது என்ன?

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தற்போது அமைதியாக காணப்படுவதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருவதுடன், அவர் தற்போது ஊடக சந்திப்புக்களையும் மற்றும் சில நிகழ்வுகளையும் தவிர்த்து வருவதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழேந்திரனின் முகப்புத்தக பக்கம் கூட சற்று மந்த நிலையில் காணப்படுவதாகவும், அவர் தொடர்பான செய்திகள் கூட தற்போது காண்பது அரிது என்றும் மட்டக்களப்பு முகப்புத்தக பாவனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதன் அடிப்படையில் பார்க்கும் போது வியாழேந்திரன் தற்போது அமைதியாக உள்ளாரா? அல்லது
கேள்வி கேட்கும் தரப்பினர்களிடமிருந்து சற்று ஒதுங்கியுள்ளாரா என்று சில கேள்விகள் தோன்றுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

ஏன் என்றால் வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். இதன் போது பல பக்கங்களிலும் ஏன் மட்டு ஊடக அமையத்தில் கூட அவசர சந்திப்பை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், எனது செயலாளர் இலஞ்சம் வாங்கவில்லை என்றும் , தன்னிடம் சிசிடிவி ஆதாரம் உள்ளது, அதை வைத்து அவர்களை வெளியில் கொண்டு வருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த கைது நடவடிக்கை நடந்து இன்று வரையில், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவரும் பிணையில் செல்ல கூட நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை என்பது இன்னும் பல சந்தேகங்களை எழுப்புவதுடன் ஊடகங்கள் மத்தியில் வியாழேந்திரன் ஆதாரம் உள்ளதாக பொய் கூறினாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

வியாழேந்திரன் கூறுகின்றார் இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் அவரின் அரசியல் எதிரிகள் மற்றும் மண் மாபியாக்கள் உள்ளார்கள் என்று. அப்படி பார்க்கப்போனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று கூறுகின்றாரா? அப்படியென்றால் இராஜாங்க அமைச்சர் ஆதாரங்கள் வைத்திருந்தும் ஏன் ஒரு மாதமாக வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மேல் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு பல ஆதாரங்கள் தேவை இதுவே உண்மை, ஆனால் நடக்கின்றவற்றை பார்க்கும் போது இராஜாங்க அமைச்சரின் தலைமையில் தானா இந்த இலஞ்சம் வாங்கும் செயற்பாடு நடைபெற்றது என்ற இன்னொரு கேள்வியும் இங்கு எழுகிறது.

அதேசமயம் இவை அனைத்திற்கும் மேலாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைளில் மட்டுப்பட்ட அளவில் தான் வியாழேந்திரன் கலந்து கொள்கிறாரா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் போனால் ஏனைய இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டது போல தன்னுடைய அமைச்சு பதவியும் பறிக்கப்படலாம் என்ற அடிப்படையிலும், புது ஜனாதிபதி தெரிவாகும் வரைக்குமாவது தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்வதற்குமாக இவ்வாறு செயற்படுகின்றாரா என்றும் கேட்க தோன்றுகின்றது.

Tags: BattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
Next Post
சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை!

சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.