Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச அதிகாரிகளை எச்சரித்துள்ள பிரதமர்!

அரச அதிகாரிகளை எச்சரித்துள்ள பிரதமர்!

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (28) தெரிவித்துள்ளார்.

கண்டியில் பௌத்த மத தலைவர்களை தரிசித்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதேபிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் அளித்த பதில் வருமாறு,

பொதுத்தேர்தலுக்கு நாம் நன்கு தயாராக வேண்டும், நாட்டை இன்னும் சிறப்பாக மாற்றக்கூடிய ஒரு அணி தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் அந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளன. எங்களின் ஆட்சியில் யார் மீதும் குற்றம் சாட்டப்பட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். இதுபோன்ற மாற்றங்கள் தொடரும்.

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களில் சிலருக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் அதிபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று கல்வியின் மீதான நம்பிக்கை உடைந்துவிட்டது.

அந்த உடைந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதுதான் எங்களின் முக்கியமான பணி. குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்வதற்கான பின்னணியை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களும் தங்கள் பணியை மகிழ்ச்சியாகத் தொடர்வதற்கான பின்னணியை வழங்க வேண்டும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
கொழும்பு கதிர்காம யாத்திரை சபையின் தலைவரான எஸ்.அருளானந்தன் அவர்களின் மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு பேரிழப்பு; நாரா.டி.அருண்காந்த் தெரிவிப்பு!

கொழும்பு கதிர்காம யாத்திரை சபையின் தலைவரான எஸ்.அருளானந்தன் அவர்களின் மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு பேரிழப்பு; நாரா.டி.அருண்காந்த் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.