மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து அமெரிக்க – கனடா எல்லையிலுள்ள நியூயோர்க் நகரத்துக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டபோது குறித்த பேருந்தில் 52 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
விபத்தின்போது பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மேலும் பலர் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








