வாகரை வம்மி வட்டவான் பொது விளையாட்டு மைதானத்தில், உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் பல்வேறு விழாக்குழு நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் திருமதி கா.அமிலினி தலைமையாற்றினார்
அதிதிகளாக வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் வி. சிவரஞ்சன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ. சுதர்சன், சமூர்த்தி முகாமையாளர் திருமதி கலைவாணி கவேந்திரன் மற்றும் வாகரை பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வில் சிறுவர்களுக்காக பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேவேளை, முதியோர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

















