Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்ற தேரர்கள் ஒன்றிணையவேண்டும்; உபாலி தேரர் வலியுறுத்து

நாட்டை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்ற தேரர்கள் ஒன்றிணையவேண்டும்; உபாலி தேரர் வலியுறுத்து

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது நாடு பாரிய கலாசார சீரழிவை எதிர்நோக்கி வருவதாக அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர், வணக்கத்திற்குரிய வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த உரையில், நாட்டில் நிலவும் கலாசார சீரழிவு மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் மௌனம் காக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழலில் கலாசாரம், வரலாறு, சாசனம் மற்றும் மகா சங்கத்திற்கு வழங்கப்படும் கவனமும் மரியாதையும் குறித்து சமூகத்தில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உருவாகியுள்ள சவால்களுக்கு மத்தியில் பௌத்த பிக்குகள் மௌனமாக இருந்தால், அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு வேறு யாரும் இல்லை என்றும், எனவே பிக்குகள் இந்நேரத்தில் முக்கியமான பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனுநாயக்கர் தெரிவித்தார்.

மேலும், எவ்வித மிரட்டல்களுக்கும் அல்லது அச்சுறுத்தல்களுக்கும் பிக்குகள் அஞ்சத் தேவையில்லை எனக் கூறிய அவர், “தேவதத்தர்கள் இருந்த காரணத்தினாலேயே புத்தரின் பண்புகள் மேலும் அழகாக வெளிப்பட்டன” என எடுத்துக்காட்டினார்.

இந்த பூமி எமது வேர்களோடு தொடர்புடைய உன்னதமான புண்ணிய பூமி எனக் குறிப்பிட்ட அவர், இந்நாட்டின் கலாசாரம், கலை, வரலாறு மற்றும் சாசனத்திற்கு இன்று வழங்கப்படும் இடம் குறித்து நாம் எவ்வளவு திருப்தியடைய முடியும் என்ற கேள்வி அனைவரிடமும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த உரை, மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் முன்னாள் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால தேரரின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் இடம்பெற்றது. இதன் போது நூறு பிக்குகளுக்கு ‘சங்ககத தக்ஷிணா’ வழங்கப்பட்டதுடன், தற்போதைய விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் எழுதிய நூலொன்றும் வெளியிடப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது

June 23, 2026
கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு
செய்திகள்

கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு

June 23, 2026
2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!
செய்திகள்

2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!

June 23, 2026
கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!
செய்திகள்

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

June 23, 2026
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து
செய்திகள்

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து

June 23, 2026
270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!
செய்திகள்

270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!

June 23, 2026
Next Post
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.