களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் வைத்து துப்பாக்கி வெடித்ததில் குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு தலைமையகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








