Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்டத்தில் தடுக்கிவிழும் இடமெல்லாம் அரசசார்பற்ற நிறுவனங்கள்; அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

மட்டு மாவட்டத்தில் தடுக்கிவிழும் இடமெல்லாம் அரசசார்பற்ற நிறுவனங்கள்; அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுக்கிவிழும் இடங்களில் எல்லாம் அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தையும் காணமுடிவதில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் விசேட தேவையுடைய மக்கள் மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் இன்றைய தினம் விழிப்புலனற்றோருக்கான புத்தாண்டுக்கான உலர் உணவுப்பொருட்கள்,புத்தாடைகள்,கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் டிஷாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜி.ஜி.முரளிதரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களுக்கான ஆணையாளர் நே.விமல்ராஜ்,திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ,அகிலன் பவுண்டேசன் பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலண்டன் வேள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதியுதவியுடன் அகிலன் பவுண்டேசன் ஊடாக சுமார் 70குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள்,புத்தாடைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பிரான்சில் உள்ள நலன் விரும்பி ஊடாக கைவிசேடமும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆரையம்பதி வடபத்திரகாளியம்மன் ஆலய பிரதமகுரு விஸ்வப்பிரம்மஸ்ரீ சர்வேஸ்வரன் குருக்களினால் விசேடபுத்தாண்டு உரையும் ஆசியுரையும் வழங்கப்பட்டதுடன் கைவிசேடமும் வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!
செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!

June 22, 2026
ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?
செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?

June 22, 2026
PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

June 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

June 22, 2026
பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!
செய்திகள்

பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!

June 22, 2026
“என்னையும் என் பிள்ளைகளையும் பின்தொடர்கிறார்கள்”; சலேவின் மனைவி முறைப்பாடு!
செய்திகள்

“என்னையும் என் பிள்ளைகளையும் பின்தொடர்கிறார்கள்”; சலேவின் மனைவி முறைப்பாடு!

June 22, 2026
Next Post
தமிழ் மக்களுக்கு தனியான ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை!

தமிழ் மக்களுக்கு தனியான ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.