Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பலமாகும் புளொட்-அனுர அரசின் கூட்டு

அம்பலமாகும் புளொட்-அனுர அரசின் கூட்டு

6 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

புளொட்டுக்குள்ளும் புதிய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 18 வாக்குகளால் ஓர் ஆசனம் கிடைக்காமல் போனது என்று ஒரு கதை உலாவுகின்றது. அது புளொட் சொந்தச் செலவில் வைத்துக்கொண்ட சூனியம் என்பதுதான் இப்போது புதுத்தகவல்.

அந்தப் 18 வாக்குகளையும் இல்லாமலாக்கியதிலும் தேசிய மக்கள் கட்சியையும் யாழ்ப்பாணத்தில் வெல்ல வைத்ததிலும் புளொட்டுக்கும் பங்கிருக்கின்றது என்கிற விடயம்தான் கட்சிக்குள் இப்போது பூதாகாரமாகக்கிளம்பத் தொடங்கியுள்ளது.

பொதுத் தேர்தலில் புளொட்டின் வெளிநாட்டு உறுப்பினர்கள் பலர் தேசிய மக்கள் சக்திக்காகப் பணியாற்றினார்கள் என்பதுதான் புதிய தகவல். இதற்காகவே புளொட் உறுப்பினர்கள் பலர் வெளிநாட்டில் இருந்துஇலங்கைக்கு வந்திருந்தார்களாம்.

தேர்தல்களின்போது இப்படிவருவது புளொட் பெயர் உறுப்பினர்களின் வழக்கம்தான். ஆனால், பலரது அவர்கள் சித்தார்த்தனின் வெற்றிக்காக இங்கு வேலை செய்வார்கள். அவர்களில் பலர் வெளிநாட்டுகளில் குடியுரிமை பெற்றவர்கள் என்பதாலும் அவர்கள் பகிரங்கமாக தேர்தல் பணிகளில் ஈடுபடமுடியாத என்பதாலும் சித்தார்த்தனின் தேர்தல் பின்புலப் பணிகளில்தான் அவர்களின் பங்களிப்பு இருக்கும். இதனால் அவர்களின் பங்களிப்புபெரியளவில் மக்களுக்குத் தெரியும் வகையில் இருப்பதில்லை. ஆனால் புளொட் அமைப்போடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு இதுநன்குதெரியும்.

பரப்புரைத் திட்டங்களிலும் நிதி திரட்டலிலும் அவர்களின் கணிசமான பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். 2015, 2020 பொதுத்தேர்தல்களில் இப்படி புளொட்டின்பல வெளிநாட்டு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் வந்து நின்று சித்தார்த்தனின் வெற்றிக்காக உழைத்துள்ளார்கள்.

இந்தத் தடவை அவர்களில் பலர் சித்தார்த்தனுக்காக அன்றி தேசிய மக்கள் சக்திக்காகவே பணியாற்றினார்கள் என்பது இப்போது புளொட்டுக்குள் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

சித்தார்த்தன் தேர்தலில் தோற்று, தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் பிரச்சினை மெல்ல வெடிக்கத் தொடங்கியுள்ளது.

புளொட்டுக்கும் ஜே.வி.பிக்கும் பூர்வஜென்மத் தொடர்புகள் உண்டு. ஜேவிபிக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது தொடங்கி அந்தப் பந்தம் நீண்டது. இப்போதும் இரு தரப்பினருக்கும் இடையில் இந்தத் தொடர்புகள் நீடிக்கின்றன. அதனால் வெளிநாடுகளில் புளொட்டுக்கு வழக்கமாகத் தேர்தல் நிதி வழங்குபவர்களில் அரைவாசிப்பேர் இந்தமுறை தேசிய மக்கள் சக்திக்குத்தான் நிதிவழங்கினார்கள் என்றும் தகவல்.

இது தவிர வந்து நின்று வேலை செய்தவர்களில் நேர்வேராஜன் என்பவரின் பெயர் பரவலாக அடிபடுகின்றது. இன்னும் பெயர்களும் வெளிவரும் என்கிறார்கள். புள்ளாட்டுக்குள் இந்தப்பிரச்சினைவெடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் தேசிய மக்கள் சக்தியை வடக்கில் வெல்ல வைத்தவர்கள் யார் என்கிற குற்றச்சாட்டுக்குள்ளும் புளொட் சிக்கிக்கொள்ளப் போகின்றது.

தோல்விக்காக அழுவதா அல்லது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மகிழ்வதா என்று தெரியாத திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கியுள்ளார் சித்தர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்
செய்திகள்

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்

June 7, 2025
ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு
செய்திகள்

ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

June 7, 2025
Next Post
மட்டக்களப்பை சேர்ந்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் கட்டுநாயக்கவில் கைது

மட்டக்களப்பை சேர்ந்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் கட்டுநாயக்கவில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.