தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கை முஸ்லீம்கள் இன்று (07) கொண்டாடுகின்றனர்.
இதனை முன்னிட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ஓட்டமாவடி கிளை ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

பெருநாள் கொத்பா தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் மௌலவி எஸ்.ஐ.றம்ளான் சிறாஜி நடாத்தி வைத்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி செயற்பாட்டாளர் எம்.ஏ.சி. நியாஸ் ஹாஜியார் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


