Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி; அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு

புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி; அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு

5 months ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று வெளியானது.

இதனிடையே இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நேற்று முன்தினம் (04) திரையிடப்பட்டது. இதனைப் பார்க்க தில்சுக் நகரில் வசிக்கும் ரேவதி (35) என்ற பெண் தனது கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளான ஸ்ரீ தேஜ் (13), சன்விகா (7) ஆகியோருடன் சென்றுள்ளார்.

அல்லு அர்ஜூனும் இந்த பிரீமியர் காட்சியை பார்க்க வந்துள்ளார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி மயக்கமடைந்துள்ளார். அவரது மகனுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுயநினைவை இழந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரேவதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஸ்ரீ தேஜ் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இரவு 10:30 மணியளவில், தியேட்டருக்கு வெளியே வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலிசார் முயற்சி செய்த போதிலும், இந்த சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மீதும், அல்லு அர்ஜூன் மீதும் ஹைதராபாத் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தியேட்டர் நிர்வாகம் கூட்டத்தை சரியாக கையாளாத காரணத்தால் ஏற்பட்ட மரணம் என்றும், அல்லு அர்ஜூன் தன்னுடைய வருகை பற்றி போலிசாருக்கு தெரிவிக்காத காரணத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இயலாமல் போனது. எனவேதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அந்த பெண் மரணம் அடைந்த விட்டார் என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறை துணை ஆணையர் கூறியதாவது,

அல்லு அர்ஜூன் வருவது குறித்து தியேட்டர் நிர்வாகம் சார்பிலும், அவரது தரப்பிலும் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திரையரங்கு நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. அல்லு அர்ஜூன் செல்ல தனி நுழைவாயில் எதுவும் அமைக்கப்படவும் இல்லை” என கூறியுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
Next Post
ரேணுக பெரேராவின் கைது ஜே.வி.பியின் அரசியல் பழிவாங்கல்; பொதுஜன பெரமுன

ரேணுக பெரேராவின் கைது ஜே.வி.பியின் அரசியல் பழிவாங்கல்; பொதுஜன பெரமுன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.