Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டனை உலுக்கிய விபத்து; விசாரணையில் வெளிவந்த விபத்திற்கான காரணம்

ஹட்டனை உலுக்கிய விபத்து; விசாரணையில் வெளிவந்த விபத்திற்கான காரணம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (21) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்தில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் ஹட்டன் – கண்டி பஸ் விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராம்மூர்த்தி இன்று (22) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பேருந்து சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே பேருந்தை செலுத்தி சென்றதாகவும், அதனாலேயே பேருந்து சாரதிக்கு பேருத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
செய்திகள்

பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

May 29, 2025
மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு
செய்திகள்

மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு

May 29, 2025
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் உணவு வழக்கும் பகுதிக்குள் பெருமளவில் திரண்டதால் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
உலக செய்திகள்

உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் உணவு வழக்கும் பகுதிக்குள் பெருமளவில் திரண்டதால் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்

May 29, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு
செய்திகள்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு

May 29, 2025
நாட்டில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு
செய்திகள்

நாட்டில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு

May 28, 2025
துப்பாக்கிச்சூடாக மாறிய வாட்ஸ்அப் வாக்குவாதம்
செய்திகள்

துப்பாக்கிச்சூடாக மாறிய வாட்ஸ்அப் வாக்குவாதம்

May 28, 2025
Next Post
ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவரவாளர்களாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்; அருண் ஹேமச்சந்திரா

ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவரவாளர்களாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்; அருண் ஹேமச்சந்திரா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.