Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் சில கோமாளிகளுக்காக கோமாளி ஊடகங்கள்; மாவை தொடர்பிலும் சாணக்கியன் குற்றச்சாட்டு (காணொளி)

தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் சில கோமாளிகளுக்காக கோமாளி ஊடகங்கள்; மாவை தொடர்பிலும் சாணக்கியன் குற்றச்சாட்டு (காணொளி)

5 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் ஒரு சில கோமாளிகள், ஒரு சில கோமாளி ஊடகங்களை வைத்து கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பதுபோன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தமுனைவதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் வருடாந்தம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (29) நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பாரியளவிலான இரத்தப் பற்றாக் குறையினை குறைக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினருடன் இணைந்து இந்த இரத்ததானமுகாம் பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக், பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வண்ணக்கர் கமல்ராஜ், பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம் மற்றும் வடபத்திரகாளியம்மன் ஆலய தலைவர் சி.பேரின்பராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இரத்ததான நிகழ்வினை முன்னிட்டும் ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலும் ரீசேட் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரத்ததானம் செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி, இலங்கை தமிழரசுக்கட்சியானது பழமைவாய்ந்த கட்சியாகும். 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை நடாத்தும் பொறுப்பும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தரப்பட்டிருக்கின்றது.

75வது ஆண்டை நிறைவுசெய்துள்ள ஒரு பழம்பெரும் கட்சிக்கான கோட்பாடுகள், கட்டுப்பாடுகள், நடைமுறைகள் உள்ள கட்சியாகும்.

தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பம் இல்லை. ஒருசில கோமாளிகள் தாங்கள் விரும்பிய விடயத்தை ஊடகத்தில் கூறவிரும்பினால் எவரயாவது அழைத்து பேட்டி கொடுக்கின்றனர். இவர்கள் யாரென்றால் கட்சியில் உருப்படியான எந்தப் பதவியும் இல்லாதவர்கள். கட்சி சம்பந்தமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்க முடியாதவர்கள். ஆனால் ஒரு சில கோமாளி ஊடகங்கள் ஒரு சில கோமாளிகளை வைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சிக்குள் குழப்பங்கள் இருப்பதாக சமூகவலைத்தளங்கள், யூடியூப் சனல்களில் போலியான செய்திகளை வெளியிடுகின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இன்னும் ஒருசில மாதங்களில் பவளவிழாவை கொண்டாடும் அளவிற்கு ஒரு பழைமையான கட்சியாகும். அந்த பவளவிழாவை நடத்தும் பொறுப்பும் மட்டக்களப்பிற்குத் தரப்பட்டுள்ளது. அதனை மிகச்சிறப்பாக செய்வதற்கு நாங்கள் எத்தனிக்கின்றோம்.

75வருடங்களாக இருக்கின்ற கட்சிக்கென்று சில கோட்பாடுகள், கட்டுப்பாடுகள், முறைகள் இருக்கின்றன. கடந்த ஒருசில வருடங்களாக கட்சியின் தலைவராக இருந்த மாவை.சேனாதிராஜா அவர்கள் எந்தவொரு விடயத்திற்கும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் கட்சித் தீர்மானங்களுக்கு வலுவில்லாத வகையில் கட்சித் தீர்மானங்களை அவரே மீறி கட்சிக்குள் கட்டுப்பாடுகள் இல்லாத வகையில் நான்கு வருடங்களாக கட்சியை கொண்டு சென்றதன் காரணமாகவே கட்சிக்குள் குழப்பங்கள் இருப்பதுபோல தெரிந்தது.

ஜனாதிபதித் தேர்தலிலே கட்சித் தீர்மானத்திற்கு மாறாக தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று நினைத்தவர்களுடன் இணைந்து கட்சிக்கு முரணாக நடந்துகொண்ட பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியிருக்கின்றோம். இதனை ஒரு குழப்பம் என்று யாரும் சொல்ல முடியாது. இதனை கட்சியை சுத்தப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் கட்சிக்குள் நான் தவறு செய்தாலும் என்னையும் இடைநிறுத்தி விசாரியுங்கள். அப்படியான கட்டுக்கோப்புடன் இருந்தால்தான் கட்சிமீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.

தயவு செய்து தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பங்கள் என்ற மனநிலையிலிருந்து வெளியில் வந்து தமிழரசுக் கட்சி சரியான பாதையில் செல்கின்றது என்ற கேள்விகளை இனிவருங் காலங்களில் கேட்குமாறு ஊடகவியலாளர்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka #Batticaloa #TNA #sanakkiyan #jaffna #ariyanenthiran

♬ original sound – battinaatham – battinaatham
Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்
செய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்

June 4, 2025
திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
செய்திகள்

திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

June 4, 2025
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு

June 4, 2025
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது

June 4, 2025
முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
செய்திகள்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

June 4, 2025
Next Post
இறக்குமதி அரிசிக்கு 45% வரி விதித்துள்ள அரசாங்கம்; முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

இறக்குமதி அரிசிக்கு 45% வரி விதித்துள்ள அரசாங்கம்; முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.