Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

5 months ago
in செய்திகள்

இந்தியாவின் பஞ்சாப் மாநில ஹோசியார்பூரில், கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை, இந்தியாவின் அமிர்தசரஸ் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கனிஸ்க மற்றும் சுமர்தன் என்ற பெயர்களை கொண்ட இரண்டு இலங்கையர்களே மீட்கப்பட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இருவரும், அல்பேனியாவில் தொழில் விசா வாங்கித் தருவதாகக் கூறி போலி பயண முகவர்களால் ஏமாற்றப்பட்ட ஆறு இலங்கையர்கள் குழுவில் உள்ளடங்கியிருந்ததாக அமிர்தசரஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், 2025 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இந்தியா வந்து டெல்லியில் தங்கியிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த அசித்த என்பவரை சந்தித்துள்ளனர்.

அவர், குறித்த இரண்டு இலங்கையர்களையும், இரண்டு இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்போது, இரண்டு இந்தியர்களும், வேலை விசாக்களை வழங்குவதற்காக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 3,000 அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து 2024 டிசம்பர் 27 ஆம் திகதியன்று இருவரையும் அமிர்தசரஸக்கு வருமாறு குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்களான அங்கித் மற்றும் இந்தர்ஜித் சிங் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்

இதன்படி, குறித்த இலங்கையர்கள் அமிர்தசரஸக்கு சென்றபோது, இந்தியர்கள் இருவரும், தமது காரில் பாதிக்கப்பட்டவர்களை பேருந்து நிலையத்திலிருந்து கடத்திச்சென்று, தமக்கு கூடுதலாக 8,000 யூரோக்களை கப்பமாக கோரியுள்ளனர்.

எனினும் குறித்த இலங்கையர்கள் இருவரும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட தங்கள் நண்பர்களிடம் உதவி கோரிய நிலையில், பொலிஸார், சில மணி நேரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.

இதன்போது இந்தியர்களான அங்கித் மற்றும் இந்தர்ஜித் சிங் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் அவர்களின் மூன்றாவது நண்பர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அறிமுகப்படுத்திய இலங்கையைச் சேர்ந்த அசித்தவும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை

June 6, 2025
அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்
செய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

June 5, 2025
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

June 5, 2025
பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
செய்திகள்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

June 5, 2025
Next Post
சிறை கைதிகளை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம்; நீதவான் பசன் அமரசேன அறிவுரை

சிறை கைதிகளை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம்; நீதவான் பசன் அமரசேன அறிவுரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.