பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் ஒருவர் கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான சீனப் பெண் கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய சீனப் பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சீனப் பெண் அவுஸ்திரேலியாவின் சுற்றுலா வீசாவை பெற்றுத் தருவதாக கூறி 15 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும், அமெரிக்க டொலர்களை பெற்றுத் தருவதாக கூறி 91 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.