Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் சனிக்கிழமை(04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 3900 கோடி கிலோ சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளனர் என்றார்.

இலங்கையில் மூன்று பேருக்குச் சொந்தமான ஆறு நிறுவனங்களினால் இந்த வரி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்களில் போதைப்பொருள் கடத்தல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூர் கைத்தொழில்களுக்கு விதிக்கப்படும் வரியைப் போன்று தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் வற் வரியை விதிக்கவும், இந்த நச்சு எண்ணெயால் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பை அவர்களிடமிருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

வரிப்பணத்தை ஏமாற்றுவதில் இவர்கள் மாத்திரம் தனியாக செயற்படுவதில்லை. இதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியை நிச்சயம் மேற்படி இறக்குமதியாளர்கள் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளால் 90 சதவீத உள்ளூர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நான்கு இலட்சம் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். உள்ளூர் தொழில்முனைவோர் அநாதரவாகியுள்ளனர் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்
உலக செய்திகள்

அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்

June 6, 2025
சுகாதார எச்சரிகைப் படக்காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் விற்றவருக்கு தண்டம்
செய்திகள்

சுகாதார எச்சரிகைப் படக்காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் விற்றவருக்கு தண்டம்

June 6, 2025
உள்ளுராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய இலங்கை தமிழரசு கட்சி
செய்திகள்

உள்ளுராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய இலங்கை தமிழரசு கட்சி

June 6, 2025
சில குறிப்பிட்ட ஐபோன்களில் YouTube செயலி இயங்காது
செய்திகள்

சில குறிப்பிட்ட ஐபோன்களில் YouTube செயலி இயங்காது

June 6, 2025
விடுதலைப் புலிகள் தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்திற்கு பாதுகாப்பு அமைச்சு பதில்
செய்திகள்

விடுதலைப் புலிகள் தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்திற்கு பாதுகாப்பு அமைச்சு பதில்

June 6, 2025
மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியச்சகர் தன்னை தானே சுட்டு தற்கொலை
செய்திகள்

மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியச்சகர் தன்னை தானே சுட்டு தற்கொலை

June 6, 2025
Next Post
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.