Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் சனிக்கிழமை(04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 3900 கோடி கிலோ சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளனர் என்றார்.

இலங்கையில் மூன்று பேருக்குச் சொந்தமான ஆறு நிறுவனங்களினால் இந்த வரி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்களில் போதைப்பொருள் கடத்தல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூர் கைத்தொழில்களுக்கு விதிக்கப்படும் வரியைப் போன்று தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் வற் வரியை விதிக்கவும், இந்த நச்சு எண்ணெயால் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பை அவர்களிடமிருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

வரிப்பணத்தை ஏமாற்றுவதில் இவர்கள் மாத்திரம் தனியாக செயற்படுவதில்லை. இதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியை நிச்சயம் மேற்படி இறக்குமதியாளர்கள் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளால் 90 சதவீத உள்ளூர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நான்கு இலட்சம் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். உள்ளூர் தொழில்முனைவோர் அநாதரவாகியுள்ளனர் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.