Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மியான்மார் அகதிகளை நாடுகடத்த வேண்டாம்; வெடித்தது போராட்டம்

மியான்மார் அகதிகளை நாடுகடத்த வேண்டாம்; வெடித்தது போராட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (9) முன்னெடுக்கப்பட்டது.

கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னேற்றப்பட்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுத்தனர்.

அவர்கள் அங்கு கருத்து தெரிவித்ததாவது,

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்துவ நாடாகும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் அவ்வாறே சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மனித உரிமைச்சட்டங்களை சர்வதேச வழக்காற்று சட்டங்கள் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கடப்பாட்டையும் கொண்டுள்ளோம்.

நாடு கடத்தப்படாமை என்பது இந்த அனைத்து சட்டங்களினதும் மையக்கொள்கையாகும் எனவே மனிதாபிமான விழுமியங்களை நிலைநிறுத்துமாறும்,இந்த அகதிகளின் சொந்த இடத்திற்கு அவர்கள் திருப்பி அனுப்பாதிருக்குமாறும் இலங்கை அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த அகதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளைத் தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.

எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களைக் கொண்டு வரவேண்டும்.

இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிடமாக மாறுவதை நாம் விரும்பவில்லை தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பினை பெறுமாறும், இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்தது வழங்கும் தகமையுடைய நாடுகளிடம் அந்த நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளுமாறும் கோருகின்றோம் என்றும் அவர்களின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையினை பிரதமருக்கும் ,வெளிவிவகார அமைச்சருக்கும் ,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு
செய்திகள்

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

July 6, 2026
இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்
செய்திகள்

இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

July 6, 2026
சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
செய்திகள்

சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

July 6, 2026
அரிசி மற்றும் நெல்லை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தும் தடை நீக்கம்!
செய்திகள்

அரிசி மற்றும் நெல்லை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தும் தடை நீக்கம்!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

July 6, 2026
QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
செய்திகள்

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

July 6, 2026
Next Post
ஜனாதிபதியால் இரண்டு நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதியால் இரண்டு நீதிபதிகள் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.