Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையை போன்று இந்தியாவிலும் ஒரு சட்டத்தால் சர்ச்சை!

இலங்கையை போன்று இந்தியாவிலும் ஒரு சட்டத்தால் சர்ச்சை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கருத்து கூற இன்றே கடைசி நாளாகும்.

பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதனால் கடந்த சில காலமாகவே பொது சிவில் சட்டம் குறித்தே பேசப்பட்டு வருகிறது. அதாவது இப்போது நமது நாட்டில் அனைத்து வித கிரிமினல் வழக்குகளுக்கும் ஒரே சட்டம் உள்ளது

ஆனால், சிவில் சட்டங்கள் அப்படி இல்லை. சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. அதாவது திருமணம், குழந்தை தத்து கொடுப்பது, விவகாரத்து உள்ளிட்ட விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையை மாற்றி நாடு முழுக்க “ஒரே பொது சிவில் சட்டம்” கொண்டு வர வேண்டும் என்பதை ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை பாஜக தனது தேர்தல் அறிக்கையாகவே கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல முக்கிய பாஜக தலைவர்களும் பொது சிவில் சட்டம் குறித்தே பேசி வருகின்றனர்.

கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, நாட்டிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். மேலும், இந்தியாவிற்கு இப்போது தேவை பொது சிவில் சட்டம் என்று கூறிய அவர், ஒரு நாடு எப்படி இரண்டு வேறு வேறு சட்டங்களைக் கொண்டு இயங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இருப்பினும், மற்றொரு தரப்பினர் பொது சிவில் சட்டம் தேவையற்றது என எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க உள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14ஆம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். ஜூலை 14ஆம் தேதி வரையில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 14ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதற்கான கால அவகாசம் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டு ஜூலை 28 வரை கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி பலரும் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவித்த நிலையில், இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் இன்று கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

தொடர்புடையசெய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
காணொளிகள்

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2025
மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்
செய்திகள்

மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்

May 18, 2025
Next Post
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.