Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விகாரைக்கு சொந்தமானது யாருக்கும் கையளிக்க முடியாது; அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விகாரைக்கு சொந்தமானது யாருக்கும் கையளிக்க முடியாது; அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம்

4 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சம்மேளனம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணியை பொது மக்களுக்குக் கையளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த கூட்டத்திற்கு, விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ அல்லது விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை.

இதன் காரணமாக அந்த இணக்கப்பாட்டை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
விகாரை அமையப்பெற்றுள்ள 7 ஏக்கர் காணி, அதனை சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.
விகாரைக்கு உரிய காணியில், சைத்யம், புத்த மெதுரா, அன்னதான மடம், மடாலயம், ஓய்வு மண்டபம், தியான மண்டபங்கள், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும்.

எனவே அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அகில இலங்கை பெளத்த மகா சம்மேளனம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு
செய்திகள்

குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு

June 6, 2025
அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி
செய்திகள்

அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி

June 6, 2025
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை

June 6, 2025
அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்
செய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

June 5, 2025
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
Next Post
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் இம்மாத இறுதியில் நாட்டிற்கு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் இம்மாத இறுதியில் நாட்டிற்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.