Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு; புதிய பிரகடனங்களுடன் முன்னோக்கி நகர வண்ணாத்தி ஆயத்தம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு; புதிய பிரகடனங்களுடன் முன்னோக்கி நகர வண்ணாத்தி ஆயத்தம்

4 months ago
in செய்திகள்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) நாட்டின் பல்வேறு பிரதேச பேராளர்களின் பிரசன்னத்துடன் விமர்சையாக நடைபெற்றது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் புதிய தவிசாளராக மௌலவி ஐ.எல்.எம். மிப்ளால் அவர்களும் அண்மையில் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் எம்.ரீ. ஹசனலியின் இடத்திற்கு புதிய செயலாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானும், பொருளாளராக எச்.எம். ஹக்கீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

மேலும், தலைவர் ஒன்று எனும் பதவிக்கு அக்கறைப்பற்றை சேர்ந்த அக்பர் அலியும், தலைவர் இரண்டு எனும் பதவிக்கு சாய்ந்தமருதை சேர்ந்த கலாநிதி ஹக்கீம் செரீப், தேசிய அமைப்பாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி.காதர், தேசிய பிரச்சார செயலாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் முஸம்மில், தேசிய இணைப்பு செயலாளராக டாக்டர் முஹம்மட் பரீட், உலமா பிரிவின் தலைவராக முஹம்மட் ஆமீர் முப்தி உட்பட பல நிர்வாகிகளும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டார்கள்.

1.இந்த பேராளர் மாநாட்டின் பிரகடனமாக பலஸ்தீன் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

2.காஸ்மீருக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரமளிக்க முன்வர வேண்டும்.

3. ஜனாஸா எரிப்புக்கு எதிராக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும், அந்த எரிப்பில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

4.ஈஸ்டர் தாக்குதலில் பழி சுமந்துள்ள முஸ்லிங்களின் மீது குத்தப்பட்ட வீணான சொற்பிரயோகங்கள் களையப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.இவ்வாறான தாக்குதல்களை ஒரு சமூகத்தின் மீது சுமத்தாமல் அரசே பொறுப்பேற்க வேண்டும்.

5.சுதந்திரத்திற்கு பின்னரான அமைச்சரவையில் இப்போதைய அமைச்சரவையிலையே முஸ்லிங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் அந்த விடயம் நிபர்த்திக்கப்பட வேண்டும்.

6. மேல் மாகாணத்தில் கொழும்பு போன்ற பிரதேசங்களில் முஸ்லிங்களின் கல்வியை மேம்படுத்த தேவையான வசதிகளை அரசு வழங்க முன்வர வேண்டும்.

7. முஸ்லிங்கள் கல்வி கற்க புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

நீண்டகாலமாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பணியாற்றிவந்த பலருக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகள் உட்பட முக்கிய பல பொறுப்புக்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
Next Post
இன்று ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

இன்று ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.