வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய 10 நிமிடங்களுக்குப் பின்னரே பொது வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது.
பொது வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு நேரத்தைக் கண்காணிக்க பற்றுசீட்டு வழங்கப்படும் என்று கொழும்பு மாநகர சபையின் பிரதிநிதி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது வாகன நிறுத்துமிடத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு 70 ரூபாய் அறவிடப்படும்.
பொது வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தியவுடன் வாகன சாரதி உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் இல்லை.
போயா தினங்கள் மற்றும் விசேட விடுமுறை நாட்களில் வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டணம் அறவிடப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.