Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எனது கலாநிதிப் பட்ட விவகாரம் பொதுமக்களின் கவலைக்குரிய விடயமல்ல; முன்னாள் சபாநாயகர்

எனது கலாநிதிப் பட்ட விவகாரம் பொதுமக்களின் கவலைக்குரிய விடயமல்ல; முன்னாள் சபாநாயகர்

1 year ago
in செய்திகள்

தன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைத்தால் அதற்கு தான் வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“என்னால் எமது ஆட்சிக்கு கரும்புள்ளி சேர்க்கப்பட்டிருந்தால், நான் வருந்துகிறேன். அதைச் சரிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்..”

“எனக்கு கலாநிதி பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனம், அது தொடர்புடைய கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், மேலும் அவற்றை விரைவில் சமர்ப்பிக்க நான் விரும்புகிறேன்.” என ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் தனது பதிவி விலகலின் போது தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த விவகாரம் குறித்து இப்போது என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவிடம் பிபிசி வினவிய போது;

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பின்வருமாறு பதிலளித்தார்.

“அந்தப் பிரச்சினை பொதுமக்களின் கவலைக்குரிய விஷயம் அல்ல, எங்கள் கட்சியின் பொறுப்பின்படி நான் சபாநாயகராக நியமிக்கப்பட்டேன். அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், டிசம்பர் 17 அன்று நாடாளுமன்றத்தில் ஒரு அமர்வு நடைபெற்றது.

இந்த நாட்டின் பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கான ஒரு அமர்வு. இந்த நாட்டின் பாடசாலை பிள்ளைகளின் சீருடைகள் குறித்து முடிவுகளை எடுக்க ஒரு வாய்ப்பு. அதேபோல், இந்த நாட்டின் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு நிவாரணத்தை விரிவுபடுத்தி அதை ரூ. 17,500 ஆக அதிகரித்து சிறிது நிவாரணம் வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு. அதைத் தவறவிட்டால், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட சமூகம் மிகவும் கடுமையான சிக்கலை எதிர்கொள்ளும்.

இந்த சூழ்நிலையை சீர்குலைக்க நாடாளுமன்றத்தில் ஒரு திட்டமிடப்பட்ட செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. உண்மையில், சபாநாயகர் பதவி குறித்து கேள்விகள் இருந்தால், பெரும்பான்மையுடன் இதை வெல்ல முடியும். ஆனால் எனக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய பொறுப்புகளில் ஒன்று, சபாநாயகராக இந்த சபையை மிகவும் சமநிலையான முறையில் நடத்துவதும், சபையில் சர்ச்சைகளைத் தவிர்ப்பதும் ஆகும். என் காரணமாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அது சபையில் நமது பெரும்பான்மையுடன் இருக்கும், அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்கும் திறன் நம்மிடம் உள்ளது, ஆனால் அப்படி செய்தால், நாம் நிறைய இழப்போம். நம் நாட்டு மக்களுக்கு எதையும் எம்மால் செய்ய முடியாது போகும்..”

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவரது கல்வித் தகுதிகளைச் சமர்ப்பிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிபிசி சிங்களம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவிடம் கேட்டது.

அதற்கு பதிலளித்த எம்.பி., “நான் தொடர்ந்து ‘மக்களுக்கு முன்வைக்கப்படும் வழிமுறை என்ன?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அப்படி ஒன்று இருந்தால், மக்களுக்கு முன்வைக்கப்படும் வழிமுறை என்ன?” என்றார்.

ஊடகவியலாளர் : நீங்கள் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாமே..

“பாராளுமன்றத்தில் அதை முன்வைக்க ஒரு முறை இருக்கிறதா? அது என்ன, பாரம்பரியம்? இவை எல்லாம் கீழ்த்தரமான வேலை.. நாங்கள் எங்கள் நற்சான்றிதழ்களைக் காட்ட நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை சரியா? அதை விட பெரிய விடயங்களை . நாங்கள் நாடாளுமன்றத்தில் செய்யப் போகிறோம். ஆனால் நாங்கள் எங்கள் மக்களுடன் விவாதிக்கிறோம். அந்த விஷயத்தில் நாங்கள் தலையிடுகிறோம். அதற்குத் தேவையான விஷயங்களை நாங்கள் முன்வைக்கிறோம். அந்த விஷயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் பணியைத் தொடர்கிறோம்.”

“நான் கலாநிதி பட்டம் குறித்து எங்கும் பேசியதும் இல்லை அதனை வைத்து அரசியல் செய்யவும் இல்லை. அதனை நிரூபிக்க இப்போதைக்கு எனக்கு தேவையும் இல்லை.. ஊடகங்கள் இவ்வாறான செயல்களை தொடர்ந்தும் செய்யும் அதனை நான் பொருட்படுத்த மாட்டேன்…”

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
முதியோர்களுக்கான உதவித்தொகையை தபால் நிலையங்களில் வழங்க நடவடிக்கை

முதியோர்களுக்கான உதவித்தொகையை தபால் நிலையங்களில் வழங்க நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.