கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட தகவலின்படி, இந்தக் காலப்பகுதியில் தரைப்படையிலிருந்து 31,088 பேரும், கடற்படையிலிருந்து 2,501 பேரும், விமானப்படையிலிருந்து 1,394 பேரும் சேவையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
முப்படைகளில் இருந்து அதிகளவானோர் விலகியுள்ளமை தொடர்பான தகவலை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டதுடன், இது தொடர்பான மேலதிக விவரங்களையும் அவர் அவையில் எடுத்துரைத்தார்.







