தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இதனை 2025 – ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டு வர முதலாளிகள் சங்கங்கள் ஒப்புதவல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget – 2025) முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 2026ஆம் ஆண்டு முதல் 30,000 ரூபாவாக உயர்த்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.