Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

4 months ago
in செய்திகள்

கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால், ஜனவரி 25, 2006 அன்று நடத்தப்பட்ட, அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஜெனரல் சரத் பொன்சேகாவை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கருதப்படும் துர்கா எனும் பெண் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குறித்த வழக்கை வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயன்ற தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகம் தலை அருகிலுள்ள மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், அவரது கால்கள் வேறு இடத்தில் கிடந்ததாகவும், கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ பரிசோதகர் கே. சுனில் குமார நேற்று(17) நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், குண்டுதாரி உடலின் எனைய பாகங்கள் வேறு இடங்களில் சிதறிக்கிடப்பதாக சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் சரத் பொன்சேகா படுகாயமடைந்தார், என்றும், மேலும் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் அவரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட மூன்று இராணுவ வீரர்கள் உட்பட பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வராசா கிருபாகரன் (மொரிஸ் ஷம்முகலிங்கம் சூரியகுமார்) சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், சட்டத்தரணிகளான சுரங்க பண்டார, லத்திகா தேவேந்திரா மற்றும் அர்னால்ட் பிரியந்தன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு பிரதிவாதி சார்பாக முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்
செய்திகள்

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்

June 7, 2025
ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு
செய்திகள்

ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.