மனைவி மீது தாக்குதல் நடாத்திய கணவனாண மருமகனை கேட்ட மாமனார் மீது மருமகன் தாக்கியதில் மாமனார் பலி மருமகன் கைது
மனைவி மீது கணவனான மருமகன் தாக்குதல் நடாத்தியதை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததுடன், மருமகனை கைது செய்துள்ள சம்பவம் இன்று (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சோந்த 66 வயதுடைய பொடி எட்வேட் போஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது,
குறித்த நபரின் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே சம்பவதினமான இன்று பகல் ஏற்பட்ட
வாக்குவாதத்தையடுத்து, மகள் மீது மருமகன் தாக்கியதையடுத்து அதனை கண்ட தந்தை ஏன் அடிக்குறீர்கள் என கேட்ட நிலையில், அவர் தலை மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.