ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தை பிணையில் விடுவிக்க கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வெளிநாட்டுப் பயணத்திற்கும் தடை விதித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பில் கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








