புத்தளம் – முள்ளிபுரம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 7,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளிபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.







