புதிய இணைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று, யன்னல் வழியாக வீசிய மாணவி கைது.
முதல் இணைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர், மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியுள்ள சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளவும், பின்னர் குறித்த குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில், நிறைமாத கற்பணியான இவர் கற்பணி என தெரிவிக்காது வைற்றுவலி என மட்டு போதன வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது, அவரது சலத்தை எடுத்து சோதனையிட்டு, வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த நோயாளி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய நிலையில் குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து, தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் குழந்தையை மீட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த குழந்தையும், தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.