நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (23) ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் இதனை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.