கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவதானித்து அவரைப் பிடிக்க முற்பட்ட போதிலும் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கேகாலை மற்றும் மாவனல்லை பொலிஸாரும் அந்த நபரைப் பின்தொடர்ந்த போதிலும் அது பலனளிக்கவில்லை. கடுகன்னாவ மற்றும் பேராதனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கடுகன்னாவையில் உள்ள அதிகாரிகள் வீதித் தடைகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், அதிகாரிகள் அவரின் மனநல மதிப்பீட்டைப் பெற அனுமதி பெறவுள்ளனர்.
கண்டி பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க தலைமையில் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.