தேசிய மக்கள் சக்திக்குள் தற்கொலை குண்டுதாரிகள் குழு நுழைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேரர் மேலும் கூறுகையில்,

இது தொடர்பான உண்மைகளை நிரூபிக்க தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், இஸ்லாமிய தீவிரவாதிகளான இந்த குழுக்களிடம் இருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதன்போது தேசிய மக்கள் சக்திக்குள் இதுபோன்ற குழுக்கள் நுழைந்ததற்கான விளக்கத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் மற்றும் புகைப்படத்தையும் ஞானசார தேரர் காட்சிப்படுத்தியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.