Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதற்கு அமைய மீண்டுமொரு தினத்திற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வருமாறு கூறி அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர்.

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டனர்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கடந்தகாலக் கூட்டங்களில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

குறிப்பாக இலங்கை சுங்கத்தின் கணினிக் கட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு முன்னர், இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பதிவுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தபோதும், அவ்வாறான அறிக்கையொதுவும் சமர்ப்பிக்கப்படவில்லையென கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

எனினும், அறிக்கையைத் தாம் வழங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறியபோதும், அவ்வாறான அறிக்கை தமக்குக் கிடைக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கையின் பிரதி குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைப் பரிசீலித்த கணக்காய்வாளர் நாயகம் அது குறித்துத் தான் திருப்தியடையவில்லையென குழுவில் தெிரவித்தார். அதிலுள்ள விடயங்கள் குறித்து குழு நீண்ட நேரம் கேள்விகளைக் கேட்டபோதும், அதிகாரிகளால் அவற்றுக்குப் பதிலளிக்க முடியவில்லை. பழைய தகவல்கள் தம்மிடம் இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, விசாரணைகளை இடைநடுவில் நிறுத்தியதுடன், பிறிதொரு தினத்தில் மீண்டும் அழைப்பதற்குத் தீர்மானித்தது. குறித்த தினத்தில் முழுமையான தயார்ப்படுத்தல்களுடன் வருமாறும் குழு வலியுறுத்தியது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
கொட்டும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025

கொட்டும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.