Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
11 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்; அமெரிக்காவில் சம்பவம்

11 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்; அமெரிக்காவில் சம்பவம்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெர்ஜினியா மாகாணத்தில் சரிதா ராமராஜு (48) என்ற பெண், தனது கணவரை விவாகரத்து செய்ததால் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது முன்னாள் கணவர் பிரகாஷ் ராஜு என்பவர், 11 வயது மகனான எதின் ராமராஜு உடன் கலிபோர்னியாவில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் மகனை தன்னுடன் அழைத்துச் சென்ற சரிதா, பேர்பெக்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அதற்கமைய, மூன்று நாட்கள் மட்டுமே மகன் தன்னுடன் இருக்க முடியும் என்ற நிலையில், கடந்த 18ஆம் திகதி டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு ஹொட்டலில் இருவரும் தங்கியிருந்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்து மறுநாள் கணவரிடம் மகனை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில், அவர் தனது மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். அதே சமயம், பொலிஸாருக்கும் தொலைபேசி அழைப்பை செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலமாக கிடந்த சிறுவனை மீட்டுள்ளனர். மேலும், மயங்கிய நிலையில் இருந்த குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர
செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர

May 11, 2025
தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்
உலக செய்திகள்

தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

May 11, 2025
9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா
உலக செய்திகள்

9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா

May 11, 2025
சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி
செய்திகள்

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

May 11, 2025
கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி
செய்திகள்

கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி

May 11, 2025
ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
செய்திகள்

ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

May 11, 2025
Next Post
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.