புதிய இணைப்பு
திருகோணமலை நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டின் பேரில் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து கைது செய்ய முற்பட்ட போக்குவரத்து பொலிஸாரை தங்களது கடமையை செய்ய விடாது தடுத்துள்ள சம்பவம், திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி அடம்போடை பகுதியை சேர்ந்த வயது(17)இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் பொலிஸாருக்கு தங்கள் கடமையை செய்ய விடாது வீட்டுக்குள் இழுத்து சென்ற குற்றச் சாட்டில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து பொலிஸார் இருவரும் கடமையில் இருந்து தங்கள் கடமையை செய்ய முற்பட்ட போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் 4 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
முதல் இணைப்பு
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, குறித்த ஓட்டுனர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர்களுடன் சிலர் சேர்ந்து பொலிஸாரை வீடொன்றுக்குள் இழுத்து அடைத்து தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதன்போது பொலிஸாரின் கையடக்க தொலைபேசியை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து வெளியான காணொளி,
