Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடுவலை பிரதான பேருந்து நிலையத்தின் வாரச் சந்தை வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்தொன்றுக்கு இன்று (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து தப்பிச் சென்றுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவலை – மாத்தறை சேவையில் ஈடுபட்டிருந்த குறித்த சொகுசு பேருந்து முழுமையாக தீக்கிரையாகி சேதமடைந்துள்ளது. மேலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவலை – கொழும்பு கொள்ளுப்பிட்டி வழித்தடத்தில் சேவையாற்றிய இரண்டு சாதாரண சேவை பேருந்துகளுக்கும் தீ பரவியதால் சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணி வரையிலான நேரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்துக்கு தீ வைப்பதை, அருகில் இருந்த மற்றொரு பேருந்தில் தங்கியிருந்த சாரதி மற்றும் நடத்துநர் கவனித்துள்ளனர். அவர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ வைப்பு நடைபெற்ற வேளையில், தீக்கிரையான சொகுசு பேருந்தின் உள்ளே சாரதி மற்றும் நடத்துநர் உறங்கிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்தோரின் எச்சரிக்கையை அடுத்து அவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தனிப்பட்ட விரோதம் அல்லது பழிக்குப்பழி நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுவலை பொலிஸாரின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
செய்திகள்

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

August 5, 2026
ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
Next Post
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.